இந்த கூட்டத்தில் மாநில நிதி குழு மாநியத்திலிருந்து ரூ.1 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்தை 15 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், பொது நிதியிலிருந்து ஒவ்வொரு ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் ரூ.80 லட்சத்தையும் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் ஒதுக்கீடு செய்தார். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்வதென்றும், கிளம்பாக்கம், புல்லரம்பாக்கம், மேலகொண்டையார் ஆகிய ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விபிஎஸ் கட்டிடங்களை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீடு செய்வதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.