நாளை நடைபெறுகிறது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் அறிக்கை; திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டம் நாளை 24ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி யளவில் பெரியபாளையம் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை காக்கவாக்கத்தில் உள்ள கிரேசூட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெ.மோகன்பாபு, எம்.முரளிதரன், டி.சங்கர், செ.யுவராஜ், இரா.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்.

இந்த கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை இளைஞரணி சார்பில் கொண்டாடுதல், இளைஞர் அணியின் 2 வது மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். எனவே, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

The post நாளை நடைபெறுகிறது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: