வழக்கை விசாரித்த நீதிபதிஆனந்த் வெங்கடேஷ், பல கோயில் விழாக்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே முதல் மரியாதை தான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கை முடித்து வைத்தார்.
The post கோயில் விழாக்களின்போது முதல் மரியாதை நடைமுறையை நிறுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
