ஒரு டிஐஜி, 4 எஸ்பி, 5 ஏஎஸ்பி, 13 டிஎஸ்பி, 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவில் செயல்பட உள்ளனர். புதிய பிரிவை உருவாக்க 28 கோடியே 92 லட்சத்து 41,000 ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும் காவல் நிலைய அதிகாரம் புதிய பிரிவிற்கு தரப்பட்டுள்ளது. முன்னதாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சில சிறப்பு பிரிவு மட்டுமே தீவிரமாக விசாரிக்கும் சூழல் இருந்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை மட்டுமே விசாரிக்கும் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அளவிலேயே பிரிவை உருவாக்கி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 383 பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ : அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.