மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் திருச்சியை சேர்ந்த லாரன்ஸ் (42) என்பவர் 11 மற்றும் 12ம் வகுப்புக்கு வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்தார். 11ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாணவியின் தாய் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் லாரன்சை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் லால்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: