புயல் எச்சரிக்கையால் உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையை சூறாவளியை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அவசர உதவிக்கு மாநில அவசரகால மையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் 1070 மற்றும் 1077 என்கிற கட்டணமில்ல தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். கட்டணமில்லா தொலைபேசியுடன் இது தவிர, இயங்கக்கூடிய கீழ்காணும் துறைகளில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன

மின்துறை-1912, சுகாதாரத்துறை-108, 104, காவல்துறை – 100, 112, 1931, 1073 1091, தீயணைப்புத்துறை – 101, கடலோர காவல் படை – 1554 பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளாதவரை பாதுகாப்பு முகாம்களைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களுக்குச் செல்வதையும், தவிர்க்க வேண்டும்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசு மேற்கொள்ளும் பேரிடர் உதவி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்

The post புயல் எச்சரிக்கையால் உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு appeared first on Dinakaran.

Related Stories: