இதேபோல் தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நான்கு நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும். இதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தாம்பரத்தில் இருந்து தீபாவளிக்கு முன்னதாக மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு 5 நாட்கள் முன்னதாக நவம்பர் 6ம் தேதியும், தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13ம் தேதியும் இயக்கப்பட உள்ளது. இது, தென் மாவட்ட பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.