இந்தியாவில் சமூக வலைத்தள சட்டங்கள் மிகவும் கடுமை: எலான் மஸ்க் சொல்கிறார்

வாஷிங்டன்: இந்திய சமூகவலைதள சட்டங்கள் குறித்து டிவிட்டர் தலைவர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். டிவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டிவிட்டர் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ சமூகவலைதளங்கள் தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் மிகவும் கடுமையாக உள்ளன. நாட்டின் சட்டங்களை தாண்டி நம்மால் செல்ல முடியாது. சட்டங்களை மதிக்க வேண்டும் அல்லது எங்கள் ஊழியர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் நாங்கள் சட்டங்களை மதிப்பை தேர்வு செய்வோம்’ என்றார்.

The post இந்தியாவில் சமூக வலைத்தள சட்டங்கள் மிகவும் கடுமை: எலான் மஸ்க் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: