அவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் தங்கத்தை கடலில் வீசியுள்ளனர். இதனையடுத்து மூவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் கடலில் வீசப்பட்ட தங்கத்தினை தேடும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர்.
இரண்டாவது நாளாக கடலில் தேடிவந்த நிலையில் நேற்று மாலையில் தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துள்ளனர். அதன் பின்னர் தங்கத்தை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு உயர் அதிகாரிகள் தங்கக் கட்டி பார்சலை உத்தேசமாக மதிப்பீடு செய்ததில் 8 கிலோ வரை இருக்கும் என தெரிய வந்தது. மேலும் இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post கடலில் வீசப்பட்ட ரூ.5 கோடி தங்கம் மீட்பு appeared first on Dinakaran.