கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடைய தந்தங்கwf இல்லை. ஒரு தந்தம், ஒரு அடிக்கு மேல் அளவுள்ளது எனவும், மற்றொன்று பெண் யானையின் தந்தம் எனவும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய சாதாரண ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து இந்த தந்தங்களை பெற்றதாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர். இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஊழியர் சதீஷ், யானைத் தந்தங்களை திருடிச் சென்றிருக்கலாம் என தெரிய வந்தது. விசாரணையில், தொழிலாளி சதீஷ் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.