நேற்று காலை 11 மணியளவில் அவசர தேவைக்காக நகையை எடுக்க முயன்றபோது நகை காணாமல் போயிருந்தது. பின்னர், வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்காததால் இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாரியப்பனின் உறவினர் விஜயகுமார் என்பவர் சாத்தூரில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டு கடந்த 27ம் தேதி ஊருக்குச் சென்றுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
The post சோபாவில் மறைத்து வைத்திருந்த 48 சவரன் நகைகள் மாயம்: துணிக்கடைக்காரர் போலீசில் புகார் appeared first on Dinakaran.