இதனால் அப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதை அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுனர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்தவாறு செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெடிக்காடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே வனவிலங்குகள் கிராமத்திற்குள் உலா வருவதை வனத்துறையினர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.
