கருவூலம், வாரியம், நிறுவனங்களில் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: தமிழக அரசின் கருவூலம், வாரியம், நிறுவனங்களில் பணிக்கான எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழி தேர்வு வருகிற 5ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல், 6ம் தேதி முற்பகல் ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கருவூலம், வாரியம், நிறுவனங்களில் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: