6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகரை சேர்ந்தவர் சிவராமன் (40). மனைவி பிரபாவதி. 2 மகன்கள் உள்ளனர். சிவராமன் இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரராக, கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற அவர், மனைவி மகன்களுடன் வசித்து வந்தார். ஓய்விற்கு பிறகு அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதற்காக மனைவியிடம் அடிக்கடி பணம் ேகட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று குடிபோதையில் வீட்டில் இருந்த சிவராமனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணியில் இருந்து ஓய்வு பெற்ற சிவராமனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: