ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கூச்சல் குழப்பம் நிலவியது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளருக்கும் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதால் ரகளையில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் முனியசாமி ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்தவருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டு போலீசார் அவரை வெளியேற்றுமாறு கூறியதால் பரபரப்பு நிலவியது. போலீசாரால் வெளியேற்றபட்டவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரை வெளியேற்றிய பின்னர் அதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

The post ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு..!! appeared first on Dinakaran.

Related Stories: