திமுக இளைஞர் அணி செயலாளராக 6வது ஆண்டு கட்சிப்பணியில் உறுதுணையாக நிற்பவர்களுக்கு உதயநிதி வாழ்த்து: மக்கள் பணி தொய்வின்றி தொடர அழைப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என்றும், மக்கள் பணி, கட்சி பணியை தொய்வின்றி தொடர்வோம் என்றும் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
திமுக இளைஞர் அணி செயலாளராக நேற்றுடன் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். உறுப்பினர் சேர்க்கை, கிளை-வார்டுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தது, கைவிடப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைத்தது, கொரோனா கால நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தேர்வு செய்தது, இரண்டாவது மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதிதோறும் கலைஞர் நூலகம், தேர்தல் பிரசாரங்கள் என மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது.

இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், இளைஞர் அணியினரை களத்தில் உற்சாகப்படுத்தி ஒருங்கிணைக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி. திமுக பணிகள் அனைத்திலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு என் அன்பும்.. வாழ்த்தும்! மக்கள் பணி, கழகப் பணியை தொய்வின்றி தொடர்வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளைஞர் அணி செயலாளராக 6வது ஆண்டு கட்சிப்பணியில் உறுதுணையாக நிற்பவர்களுக்கு உதயநிதி வாழ்த்து: மக்கள் பணி தொய்வின்றி தொடர அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: