இதனால், சிவசங்கருக்கு வேளவேந்தன் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணி அளவில், பெரிய கல்லை எடுத்து வந்து, வேளவேந்தன் தலையில் போட்டுவிட்டு தப்பினார். இதனால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த வேளவேந்தனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே வேளவேந்தன் உயிரிழந்தார். தகவல் அறிந்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வேளவேந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிவசங்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை: மாதவரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.