சென்னை: புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக வாகனத்தில் அமலாக்கத்துறை அழைத்துச் சென்றது.