இது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்; ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும் சுயேட்சை மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாக கூறினார். சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் மனுவும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் மக்கள் இடையே எழுந்துள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், துணைநிலை ஆளுநர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக என அனைவரும் சேர்ந்து புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், இதனால் ரங்கசாமி நிம்மதியற்ற முதலமைச்சராக இருப்பதாகவும் அவர் கூறினார். ரங்கசாமி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
The post புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை appeared first on Dinakaran.