இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஸ்வப்னில் குசேல் 451.4 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். மனு பாக்கர், சரப்ஜோத் சிங்கை தொடர்ந்து ஸ்வப்னில் குசால் 3வது வெண்கலத்தை வென்றார். இந்தியாவுக்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
The post பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் 3வது பதக்கம் வென்ற இந்தியா வீரர் ஸ்வப்னில் குசேல்!! appeared first on Dinakaran.