இந்த சூழ்நிலையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் மற்றும் காவிரி படுக்கையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்குவதில் சிரமம் உள்ளதா?, நீரேற்று நிலையத்திற்கு பாதிப்பு உள்ளதா, என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தர்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டு இச்சூழலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் (தஞ்சாவூர்) எழிலரசன், நிர்வாக பொறியாளர்கள் நாக ஆனந்த், பன்னீர்செல்வம், ராஜேந்திரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
The post கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.