அடுத்து வந்தவர்கள் பெரிதாகக் கை கொடுக்காவிட்டாலும், கே.எல்.ராகுல் – அக்சர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை நெருங்கினர். அவர்கள் ஆட்டமிழந்தபோது, இந்தியா 40.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு 47.3 ஓவரிலேயே 230 ரன் எடுத்து சமநிலையை எட்டினாலும், தேவையில்லாமல் அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டம் ‘டை’ ஆனது. இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
The post 2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு appeared first on Dinakaran.