ஓடைக்காட்டில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

ஊட்டி, ஏப். 19: ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா விமரிசையாக நடந்தது. ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ் மற்றும் ஊட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாயன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும், விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.வட்டார கல்வி அலுவலர் அனிதா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேணுகா, துணைத்தலைவர் செந்தில்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கேட்ராஜ், மீன்ராஜ், ராஜேந்திரன், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஆங்கில ஆசிரியர் ராதா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

The post ஓடைக்காட்டில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: