சென்னை : சென்னையில் ஒலி மாசு வரைபட ஆய்வை மேற்கொள்ள ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு 4 சென்சார்கள் வீதம் பொருத்தப்பட உள்ளன. 4 சென்சார்கள் வீதம் பொருத்தப்பட்டு மொத்தம் 60 சென்சார்கள் மூலம் ஒலி மாசு தொடர்பான வரைபட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் குடியிருப்புகள், போக்குவரத்து சந்திப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சென்சார் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் ஒலி மாசு வரைபட ஆய்வை மேற்கொள்ள ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை!! appeared first on Dinakaran.