இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் போலீசார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இதுவரை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. நிறுவனத்தைச் சேர்ந்தவர்களில் இன்னும் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது? இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நிறுவனத்தின் முக்கிய நபர்கள் யார்? நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இதுவரை எத்தனைபேர் முதலீடு செய்துள்ளனர். நிறுவனங்களின் சொத்து மற்றும் அதன் மதிப்பு என்ன? இன்னும் கைப்பற்ற வேண்டிய பொருட்கள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை போலீசார் தரப்பில் முழுமையான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை டிச.18க்கு தள்ளி வைத்தார்.
The post நியோமேக்ஸ் மோசடி வழக்கு முழுமையான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.