இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் நாற்று பறித்து அவர்களே நடவு பணியை மேற் கொண்டு வருகின்றனர். இவர்கள் ஏக்கருக்கு ரூ.4,500 மற்றும் 5 கிலோ அரிசி கூலியாக பெறுகின்றனர். மேலும் இவர்கள் நடவு நடைபெறும் இடத்திலேயே தங்கி தடவு பணியை செய்து வருவதால் கூலி ஆட்களை தேடி வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு இல்லை. மேலும் இவர்களுக்கான கூலியும் சற்று குறைவு என்பதால் வைத்து நடவு விவசாயிகளுக்கு ஓரளவு பணம் மிச்சமாகிறது.
உள்ளூர் தொழிலாளர்கள் நடவு பணி செய்தால் காலையில் நாற்று பறிக்க செல்லும் போது இட்லி, டீ , 11 மணியளவில் டீ, வடை, மதிய சாப்பாடு தர வேண்டும். மேலும் மாலை வேலை முடித்து செல்லும் போது ஆண்களை தனியாக கவனிக்க வேண்டியதிருக்கிறது. மேற்கு வங்க தொழிலாளர்களால் செலவு குறைவதால் விவசாயிகள் அவர்களை நாடுவது அதிகரித்துள்ளது.
தற்போது இந்த தொழிலாளர்கள் நீடாமங்கலம், சித்தமல்லி, ராயபுரம், பரப்பனாமேடு, கடம்பூர், பூவனூர், மேலபூவனூர், காளாச்சேரி, ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாற்றுகள் பறித்து நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நீடாமங்கலம் பகுதியில் கோடை நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் மும்முரம் appeared first on Dinakaran.