ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், சுரேஷ்கோபி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொச்சி சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களை அனுப்ப ஏற்பாடு செய்தார். அதன்படி, ஒவ்வொரு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், அவர்கள் செல்ல வேண்டிய வழித்தடம் – ரூட் மேப் விளக்கப்பட்டு உள்ளது. உறுதுணையாக காவல்துறையினரும் செல்கின்றனர்.
The post குவைத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி : சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் தமிழர்களின் உடல்! appeared first on Dinakaran.