அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் , குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இச்சம்பவத்திற்கு காரணமாக மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள காந்தி சிலை முன் அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை தெரியப்படுத்தினர்.
The post மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி காந்தி சிலைக்கு மனு கொடுத்து போராட்டம்!! appeared first on Dinakaran.