இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கட்டாய தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி அரசுக்கு முறையிட்டும், எந்த பதிலும் இல்லை. தெலுங்கு மொழியில் படித்த மனுதாரர்கள், தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கே.இளங்கோ வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், அதன் அடிப்படையில் மூன்று போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 41 ஆயிரத்து 485 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். மனுதாரர்களின் கோரிக்கையை அரசு தான் பரிசீலிக்க வேண்டும். இதில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர்கள் தேர்வில் பங்கேற்கலாம். இந்த மனுவுக்கு மார்ச் 7ம் தேதிக்குள் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்வு மொழி சிறுபான்மையினருக்கு விலக்களிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.