ஆனால் தீ கொழுந்து விட்டு ஏறிய தொடங்கியதால் தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கிடங்கில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிடங்கில் 12 மணி நேரமாக கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்து ஏற்பட்டுள்ள தனியார்கிடங்கின் அருகே இந்தியன் ஆயில் கேஸ்சிலிண்டர் தொழிற்சாலை உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் நேரில் சென்று தீயை அணைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
The post சென்னை மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் தீ விபத்து: தீயணைப்புத்துறை இணை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.