மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்: காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற செல்லூர் ராஜூ

மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எடப்பாடியில் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வந்தார். அவரை கட்சி நிர்வாகள் வரவேற்றனர். அப்போது மாநகர மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ, மாலை அணிவித்து எடப்பாடியின் காலில் விழுந்து வணங்கினார்.

தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் ெசய்ய எடப்பாடி சென்றார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர், மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர், முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில், அவருக்கு பிரசாதம் வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றார். அவருடன் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ஆர்.பி உதயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்: காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Related Stories: