சவுந்தர்யா அளித்த புகாரின்படி, தேனாம்பேட்டை போலீசார் சவுந்தர்யாவின் கார் டிரைவர் மற்றும் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல மகளிர் கல்லூரியில் கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், சொகுசு காரின் சாவி என்பதால் மற்றொரு சாவியை அந்த நிறுவனத்திடம் புதிதாக வாங்க வேண்டும். இதனால் தான் சவுந்தர்யா புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், மாயமான சாவி குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post விலை உயர்ந்த சொகுசு காரின் சாவி மாயம் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் புகார்: கார் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.