ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கத்தில் குறைந்தத் தாழ்வுப் பகுதி உருவானது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: