ஊட்டி நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைப்பு

ஊட்டி, டிச. 9: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் முகக்கவசம் அணிவதன் கட்டாயம் தொடர்பான பதாகைகள் வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து பொதுமக்களிடம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பொது இடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்ற பகுதிகளில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பலகைகளை ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும், இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: