இதைத் தொடர்ந்து, இன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கேரளா கடன் வாங்குவதில் உச்சவரம்பு விதிப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. கேரள அரசு போராட்டத்திற்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பதாகைகள் ஏந்தியபடி ஒன்றிய அரசு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துவதை உறுதி செய்வதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.பிப்ரவரி 8ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு சிவப்பு எழுத்து தினமாக இருக்கும், “இவ்வாறு தெரிவித்தார்.
The post நேற்று கர்நாடகா.. இன்று கேரளா… நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்து தென் மாநிலங்கள் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.