இதன் காரணமாக ஒரு வார காலமாக சூரிய உதயம் தெரியவில்லை. இன்றும் கன்னியாகுமரியில் மழை இல்லை என்றாலும் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் சூரிய உதயம் தெரியாததால் கடற்கரையில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் இன்று காற்று குறைந்து குளிர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து கடலில் செல்வதற்காக டிக்கெட் எடுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் திரண்டனர். தொடர்ந்து டிக்கெட் பெற்று கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலைக்கு சென்றனர். சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு காரணமாக கன்னியாகுமரி போலீசார் கடற்கரை, ரதவீதி, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.
