அப்போது 2023ம் ஆண்டு மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சசுரேந்தர்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிலரையும் காவல்துறை தேடி வருகிறது. இவர்கள் அனைவரும் 3 வங்கி கிளைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.53 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
The post காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி கிளைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி..!! appeared first on Dinakaran.