இதேபோன்று, பெரியகாஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் கார்த்தி (31). இவர், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உப்புக்குளம் விநாயகர் தெரு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டூ வீலரில் வந்து அவரை வழிமறித்த சதீஷ் (எ) ஆர்.கே.சதீஷ் (33), விஜயகுமார் (23), மணிகண்டன் (21) ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி கார்த்தியிடமிருந்து 1,200 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இதில் சதீஷ் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post காஞ்சிபுரத்தில் இருவேறு இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி: ரவுடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.