சாதிச் சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம்!

தென்காசி: சாதிச் சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காட்டு நாயக்கன் சாதிச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்ததை நிராகரித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க அணையிட்டுள்ளது. தென்காசி சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சாதிச் சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம்! appeared first on Dinakaran.

Related Stories: