இவர்கள் மூவரும் டாக்சியில் சென்று கொண்டிருந்தனர். திடீரென டாக்சியின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் டிரைவரைத் தவிர மூன்று பேரும் இறந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயமடைந்த கார் டிரைவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு வருமாறு அவர்களது குடும்பத்தினர் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான தூதரக உதவியை 3 பேரின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
The post பஞ்சாப் மாநிலத்தில் ேசாகம்; கனடாவில் நடந்த விபத்தில் 2 மாணவிகள், சகோதரர் பலி appeared first on Dinakaran.