ஜம்மு-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்று விட்டதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வைஷ்ணவ் தேவி கோயில், ஸ்ரீநகர், குல்மார்க், உத்தம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் சாலைகளில் பனி படர்ந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூஞ், ரஜோரி மாவட்டங்களை ஸ்ரீநகருடன் இணைக்கும் முகசாலை மூடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் இரவு முதல் பனி கொட்டி வருகிறது. அங்குள்ள கேதார்நாத் கோயில் பனிப்போர்வை போத்தியது போல காட்சியளிக்கிறது.
The post ஜம்மு காஷ்மீரை சூழ்ந்த கடும் பனிப்பொழிவு: சாலைகள்,மரங்கள் என ஒன்றுவிடாமல் படர்ந்த பனி!! appeared first on Dinakaran.