இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டர் யாஹ்யா சின்வர். ஆனால் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் மிதவாத தலைவர் ஆவார். அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர் இஸ்மாயிலுக்கு இஸ்ரேல் ராணுவம் குறி வைத்தது. கடந்த 2019ல் இருந்து கத்தார் தலைநகர் டோகாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் அடிக்கடி துருக்கி, ஈரான் நாடுகளுக்கு சென்று வந்தார். கடந்த 2006ல் பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. அப்போது காசாவின் பிரதமராக ஹனியே பதவி வகித்தார்.
பழிவாங்குவோம் என ஈரான் அறிவிப்பு
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை. ஹனியே எங்கள் நாட்டின் விருந்தாளியாக இருந்தார். இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
The post ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி appeared first on Dinakaran.