அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்த்துள்ளனர். இதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர், அந்த சலுகையை இழக்க வேண்டியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்த பின் இதுவரை ஒரு மூன்றாம் பாலினத்தவர் கூட இட ஒதுக்கீடு சலுகையை பெறவில்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள், 3ம் பாலினத்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4க்கு தள்ளிவைத்தனர்.
The post கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாமா? அரசு பரிசீலிக்க ஐகோர்ட் ஆலோசனை appeared first on Dinakaran.