இந்த நிறுவனத்தில் நேற்று காலை 7 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடையில் ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை தவிர்த்து புதிதாக வெளியிலிருந்து வரும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பூர்விகா உரிமையாள யுவராஜ் நடராஜனின் வீடு, சென்னை பள்ளிக்கரணையில் இந்த நிறுவனம் தொடர்புடைய மற்றொரு இடத்திலும் என 3 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.