வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் ஓரளவுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: