சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ‘‘சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான எண்ணம் எங்களுக்கு இல்லை’’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் பொன்விழா எழுச்சி மாநாடு இந்தியாவே திரும்பி பார்க்கின்ற வகையில் சரித்திரம் படைக்கும் மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் விலைவாசி கிடுகிடு என உயர்ந்து வருகிறது. குறிப்பாக, வெங்காயம், இஞ்சி விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

மதுரையில் நூலகத்தைத் திறந்துள்ளனர். அதற்கு கலைஞரின் பெயருக்கு பதில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் பெயரைச்சூட்டியிருக்கலாம். அதேபோல, டிடிவி தினகரன் நாங்கள் தான் மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளதை ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். முதலில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை. இது குறித்து அவர் ஏன் கவலைப்படுகிறார் என எனக்கு தெரியவில்லை. ‘தீ குச்சிக்கு எப்போதுமே தலைக்கனம் அதிகம்’ எனவே, தலைகீழாக தீக்குச்சி அழிவதுபோலதான் இதுவும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: