இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜப்பான்,இத்தாலி, கனடா,பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளை சேர்ந்த தொழில்துறை சம்மேளனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை ஏற்று கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ‘‘மனிதன், விலங்குகள்,செடிகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. அனைத்து உயிரினங்களின் வாழ்வின் மதிப்பை எடுத்து காட்டும் வகையில் கருப்பொருள் அமைந்துள்ளது’’ என்றார்.
The post ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் இந்தியாவின் யோசனை ஜி 7 நாடுகள் ஏற்பு appeared first on Dinakaran.