பூந்தமல்லியில் பேட்மின்டன் விளையாட்டு அரங்கம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில், பேட்மின்டன் விளையாட்டு அரங்கத்தை சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார். பூந்தமல்லி நகராட்சி 11வது வார்டு லட்சுமிபுரம் சாலை மாணிக்கம் நகர் பகுதியில், நகர மன்ற உறுப்பினர் மா. திருமலை ஏற்பாட்டில் புதிதாக பேட்மின்டன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்புவிழா நேற்று பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் நடைபெற்றது.

நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், நகர அவைத்தலைவர் தாஜூதீன், நகர நிர்வாகிகள் துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி மலர்மன்னன், அசோக்குமார், லயன் சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், சௌந்தர்ராஜன், அமிதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்து இறகுப்பந்து விளையாடினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் காயத்ரி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் கமலேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லியில் பேட்மின்டன் விளையாட்டு அரங்கம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: