அரசு தரப்பில், தகுதியான 132 பேரில் 10 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 122 பேருக்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக எட்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், எட்டு வாரங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மனுதாரர்களின் மன உளைச்சல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு 122 மனுதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வீதம் 1லட்சத்து 22ஆயிரம் ரூபாயை வழக்குச் செலவாக இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு விவகாரம் வழக்கு செலவாக 122 பேருக்கு தலா ரூ.1000 வழங்க வேண்டும்: சுகாதார துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
