இந்நிலையில், 5 ஆயிரத்து 990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டரை பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியலும் வெளியாகி உள்ளது. 198 பேர் கொண்ட இப்பட்டியலில், 850 மதிப்பெண்களுக்கு 587 புள்ளி 25 மதிப்பெண்கள் பெற்ற பெண் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 198 பேருக்கும், வரும் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post 5990 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! appeared first on Dinakaran.